Sunday, February 15, 2015

1958இல் மலேசியத் தமிழர் பயன்படுத்திய கடப்பிதழ்

28.04.1958இல் வினியோகிக்கப்பட்ட கடப்பிதழ். இக்கடப்பிதழில் மூன்று முத்திரைகள் உள்ளன.

முதல் முத்திரை 10 ஜூலை 1958- இல் சென்னை துறைமுகச் சுங்கத்தால் (Port Registration Officer, Madras Harbour) இடப்பட்டுள்ளது. அம்முத்திரையில் இந்தியாவை அடைந்ததாகவும் (arrived in India) குறிப்பிடப்பட்டுள்ளது.

13 மார்ச்சு .1959-இல் இடப்பட்ட இரண்டாம் முத்திரையில் இந்தியாவைவிட்டு வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளது (Left India).

மூன்றாம் முத்திரை 19 மார்ச்சு .1959-இல் பினாங்கு சுங்கத்துறையால் இடப்பட்டுள்ளது.

இதன் வழி சென்னையிலிருந்து கப்பலில் பினாங்கு வந்து சேர்வதற்கு ஆறு நாள்கள் தேவைப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.

செர்க்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் (மலேசியா) - 1962

நன்றி : மலர்

Wednesday, February 11, 2015


நல்வரவு

வணக்கம்.

இந்த புதிய வலைப்பூ தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூ பட்டியலில் இன்று முதல் இணைகின்றது.

மலேசியத் தமிழர்களின் வரலாற்றை புகைப்படங்களாகப் பதிந்து வைக்க உருவாக்கப்பட்ட பகுதி இது.

அன்புடன்
சுபாஷிணி